இஸ்ரேல் தாக்குதலில் பலத்த சேதமடைந்த எண்ணெய் கிடங்கில் உற்பத்தியை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத் தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் ஈரானின் பதிலடி தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் போர்ப்பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், ஈரானின் தெஹ்ரான் அருகே உள்ள மிகப்பெரிய எண்ணெய் கிடங்கைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், எண்ணெய் கிடங்கு பலத்த சேதமடைந்து தீப்பற்றி எரிந்ததால், அங்கு உற்பத்தியை நிறுத்துவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தச் சென்ற ஈரானிய ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இஸ்ரேலின் கஃபர் கிலாடி பகுதிக்கு மேலே பறந்து சென்ற ஈரானிய ட்ரோனை இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்திய காட்சி வெளியாகி உள்ளது.