கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்கக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
இதனால் பேச்சிப்பாறை அணை அபாய அளவான 45 அடியைத் தாண்டியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் திற்பரபரப்பு அருவில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.