சிந்து நதி விவகாரத்தில் உபரி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் புதிய திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை கண்டித்து அந்நாட்டுடனான சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதையடுத்து அங்கு பகுல்துல் மற்றும் பர்சார் ஆகிய இரண்டு புதிய நீர் சேமிப்பு அணைகளை கட்டுவதற்கான பணிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் சிந்து நதியின் உபரிநீரை ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாய தேவைகளுக்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உபரி நீரை திருப்பிவிட 113 கிலோமீட்டர் நீள கால்வாயைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறு குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.