காசாவில் உணவிற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில், உணவு லாரிகளுக்காக காத்திருந்தபோது இஸ்ரேலிய டாங்கிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தால் நாசர் மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் பலரது நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.