பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி - பொதுமக்கள் அவதி!
Jun 20, 2025, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் உரிய நேரத்தில் பணிகள் முடிக்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நுங்கம்பாக்கம் என்பது சென்னையின் மையப்பகுதி என்பதைத் தாண்டி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் பிரதான பகுதியாக அமைந்திருக்கிறது. அப்படியான பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் பள்ளம் மேடுகள், பணிகள் முடிந்தும் மூடப்படாத பள்ளங்கள் எனச் சாலைகளில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழலை உருவாக்கியுள்ளது. வள்ளுவர் கோட்டம் சாலையில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மாதங்கள் பல கடந்தும் நிறைவடையாமலே காட்சியளிக்கிறது.

குறிப்பிட்ட காலங்களுக்குள் முடிக்கப்பட வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் மழைக்காலம் முடிந்தும் தொடர்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் அரை மணி நேரம் மழைபெய்தாலே மழைநீர் குளம் போலத் தேங்கியிருக்கும் வள்ளுவர் கோட்டம் சாலையில், பள்ளம் எது? மேடு எது? எனத் தட்டுத்தடுமாறியே பயணிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

காலை 7 முதல் 9 மணி வரையிலும் மாலை 4 முதல் 7 மணி வரையிலும் பள்ளி கல்லூரிக்குச் செல்வோர், பணிக்குச் செல்வோர் என ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் இந்த சாலையில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் மழைநீர் வடிகால் பணிக்கென பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் நிலையிலும், அப்பணிகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்கப்படாமல் இருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே வெளிப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: பொதுமக்கள் அவதிThousands of crores wasted: Rainwater drainage work at a snail's pace - public sufferingநத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணிகோடி வீண்மழைநீர் வடிகால் பணி
ShareTweetSendShare
Previous Post

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

Next Post

புவிசார் அரசியலில் திருப்பம் : இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்பும் சீனா!

Related News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா : ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு!

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்!

திருப்போரூர் : சாலையில் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டல்!

தயாநிதி மாறன் நோட்டீஸ் : சன் டிவி நெட்வொர்க் விளக்கம்!

மதுரை : திருமாவளவன் கார் முன்பு சண்டையிட்டு கொண்ட விசிக நிர்வாகிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரி ரயில்வே மேம்பாலம் மாற்றி அமைக்கப்படும் : அறிவிப்பு

நெல்லையப்பர் கோயில் நில வழக்கு – நீதிமன்றம் ஆணை!

அசீம் முனீர்- ட்ரம்ப் சந்திப்பு : தொடரும் ஆப்ரேஷன் சிந்தூர் – செக் வைத்த பிரதமர் மோடி!

சில காங். தலைவர்களுடன் கருத்து வேறுபாடு உள்ளது : சசிதரூர் 

திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த போலி பட்டாவை ரத்து செய்த கோட்டாட்சியர் : உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியீடு!

ஓசூர் அரசு மருத்துவமனையில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் : மக்கள் அவதி!

முருகர் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு!

மகாராஷ்டிரா : துணை விமானி உடலுக்கு இறுதி அஞ்சலி!

ஓய்வு பெற்ற காவலரை ஏமாற்றிய காவல்துறை அதிகாரி!

ஜி பே மூலம் பணம் அனுப்பியதாக 112 பேரிடம் நூதனம் மோசடி : கோவையில் தம்பதி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies