திமுக தோல்வி மனநிலையில் இருப்பதால் பல முயற்சிகளை கையாண்டு வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது மக்களுடன் சேர்ந்து பல்வேறு யோகாசனங்களை செய்து அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், பல்வேறு நோய்களுக்கு யோகா மருந்தாக உள்ளது என தெரிவித்தார். முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவித்த அவர், கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழக அரசுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.