திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கொடைக்கானல் பேத்துப்பாறையில் வசிப்பவர்கள், கடந்த 50 ஆண்டுகளாக அங்குள்ள அரசு தரிசு நிலத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த நிலத்தில் வழக்கம்போல் அடக்கச் செய்யக் கிராமத்தினர் சென்றுள்ளனர்.
அப்போது அந்நிலத்தின் அருகே உள்ள தனியார் நிலத்தின் உரிமையாளர்கள், உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அவர்களது எதிர்ப்பை மீறி கிராம மக்கள் உடலை அடக்கம் செய்தனர். அரசு தரிசு நிலத்தை அளவீடு செய்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.