சொத்துக்காக மகள்கள் மிரட்டியதால் விரக்தியடைந்த தந்தை 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தை ஆரணி அருகே கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கோனையூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான விஜயன் என்பவருக்குக் கஸ்தூரி என்ற மனைவியும் ராஜலட்சுமி, சுப்புலட்சுமி என இரு மகள்களும் உள்ளனர்.
விஜயன் – கஸ்தூரி இடையே பல வருடங்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக விரக்தியடைந்த விஜயன் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுப் பத்திரத்தைக் கடந்த சில நாட்களுக்கு முன் படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தி உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயன், மனைவி, மகள்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை உண்டியலில் செலுத்தியதாகக் கூறினார்.
மேலும் சொத்து பத்திரத்தைக் காணிக்கையாகச் செலுத்தியதால் மனைவியின் உறவினர்கள் தனக்குக் கொலை மிரட்டல் விடுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.