பால்கன் – 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற மகனை, இந்திய வீரர் சுபன்ஷு சுக்லாவின் தாய் கண்ணீர் மல்க உற்சாகப்படுத்தினர்.
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் – 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதனை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுபன்ஷு சுக்லாவின் பெற்றோர் கண்டு களித்தனர்.
அப்போது, சுபன்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா, கண்ணீர் மல்க உற்சாகப்படுத்தினார். மேலும், சுக்லாவின் சகோதரிகள் மற்றும் உறவினர்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
இதனிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா, அன்பான நாட்டு மக்களுக்கு நமஸ்காரம் எனக் கூறியுள்ளார்.
விண்வெளி பயணத்தின்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் விண்வெளியில் இருக்கிறது என்றும், இது ஒரு அற்புதமான பயணம் எனவும் தெரிவித்துள்ளார்.
தனது தோள்களில் பொறிக்கப்பட்ட திரங்கா, அனைவருடனும் இருக்கிறேன் என்பதைச் சொல்வதாக அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய இந்தப் பயணம் இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்திற்கு ஒரு தொடக்கம் என்றும், இந்திய மக்களின் நெஞ்சம் பெருமையால் நிரம்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தைத் தொடங்குவோம் என்றும், ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! எனவும் சுக்லா பேசியுள்ளார்.