போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர் பிரசாத் அண்மையில் அடிதடி வழக்கில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிற்கு போதை பொருட்களை விற்றது தெரிய வந்தது.
இதனால், நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது நடிகர் கிருஷ்ணா படப்பிடிப்புக்காக வெளியூர் சென்ற நிலையில் அவருக்கு சம்மன் அனுப்பட்டிருந்தது.
இதற்கிடையில் கிருஷ்ணாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஏற்கனவே ஒரு தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் கூடுதலாக 4 தனிப்படைகள் அமைத்து அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதால் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.