திமுக என்ன செய்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் மிசா காலத்தில் சிறை சென்ற தியாகிகளுக்குப் பொன்விழா கொண்டாடப்பட்டது.
இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மற்றும் மிசா காலத்தில் சிறை சென்ற தியாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், திமுக என்ன செய்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.