குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் நேத்ரோத்சவ் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோயிலில் ரத யாத்திரைக்கு இரண்டு நாட்களுக்கு முன் நேத்ரோத்சவ் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா கண்களுக்கான திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் நடைபெற்ற விழாவில் ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்ரா ஆகியோரின் சிலைகளுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
இதில் அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உள்ளிட்ட ஏராளாமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.