வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த 4 ஆண்டுகளில் ஏமாற்று மாடல் ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
வரி உயர்வால் நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் மகிழ்ச்சி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி முதல்வர் சிந்திக்கவில்லையா? என்றும், திமுக ஆட்சியில் ஏற்றப்பட்ட வரிகளை குறைக்க வேண்டும் எனத் முதல்வருக்கு தோன்றவில்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒரு நபர், களவாடுவது பற்றி புலம்புவது ‘சாத்தான் வேதம் ஒதுவது போல்’ இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.