மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பி.எஸ்.4 இன்ஜின் சோதனை மாபெரும் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி உந்துசக்தி மையம் இஸ்ரோவின் முதுகெலும்பாக திகழ்கிறது. இந்த உந்துசக்தி மையத்தில் விண்கலங்களை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக், விகாஷ் மற்றும் பி.எஸ்.4 போன்ற முக்கிய என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு, பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மேம்படுத்தப்பட்ட பி.எஸ்.4 இன்ஜின் சோதனை 665 வினாடிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்றும், இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.