இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு கிடைத்தும் தவற விட்டதாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இங்கிலாந்து தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் கருத்து தெரிவித்தார்.
மேலும் இந்திய அணியின் கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை என்றும் கூறினார்.