சமூக வலைத்தளங்களில் இந்து கடவுள்கள், இந்து வழிபாட்டு முறைகளைத் தவறாக சித்தரித்துப் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அருணகிரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முதன்மை உதவியாளராக பணியாற்றியவர்.
இவர் தனது பெயரில் உள்ள சமூக வலைத்தளத்தில் இந்து கடவுள்களையும், இந்து வழிபாட்டு முறைகளையும் தவறாகச் சித்தரித்துப் பதிவிட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.