திருச்சி மாவட்டம் முசிறி அருகே மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி மற்றும் நகைகள் மீது கையாடல் செய்து முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொட்டியத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி மற்றும் அடகு வைத்த நகைகள் ஆகியவற்றை வங்கியின் மேலாளர் உட்பட ஊழியர்கள் கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் விசாரணைக்காக வந்திருந்த வங்கி உயரதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருச்சி – நாமக்கல் சாலையில் வங்கி முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.