நீலகிரி மாவட்டம், கூடலூரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
கூடலூர் ஆரூட்டுப்பாறையைச் சேர்ந்த வினோத் என்பவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிக்கு செல்லாத நிலையில் வீட்டில் இருந்தபோது கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் வினோத் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை மீட்டு கூடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.