மேட்டூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் மனு வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
மேட்டூர் அருகே மேச்சேரி, குட்டபட்டி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
அப்போது, போதிய இருக்கைகள் போடப்படாததால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்க உரிய ஏற்பாடு செய்யப்படாததால் தள்ளமுள்ளு ஏற்பட்டது. இதனால், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கடும் அவதியடைந்தனர்.