ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் திமுகக் கவுன்சிலர் ஒருவர், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தகவல் தெரிவிப்பதில்லை எனக்கூறி மேயருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஈரோடு மாமன்றத்தின் சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது.கூட்டம் தொடங்கியதும், அதிமுக உறுப்பினர்கள் அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இதனிடையே திமுக மாமன்ற உறுப்பினர்க் கோகிலவாணி , மாமன்ற உறுப்பினர்களின் பகுதிகளில் மேற்கொள்ளும் பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து எவ்விதத் தகவலும் தெரிவிப்பதில்லை எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த மேயர் நாகரத்தினம் மாமன்ற உறுப்பினரின் வார்டுக்குள் பூஜைப் போட்டால் கூட மேயருக்குள் தகவல் தெரிவிப்பதில்லை எனக் கூறியதால் மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்க் கோகிலாவாணி இடையே கடும் வாக்குவாதம், அமளி ஏற்பட்டது.