அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தை விசாரிக்கும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து புலனாய்வுப் பணியகத் தலைவர் ஜி.வி.ஜி. யுகந்தருக்கு, சிஆர்பிஎஃப் கமாண்டோக்களால் வழங்கப்படும் எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அகமதாபாத் விமான விபத்து தொடர்பான விசாரணையை வழிநடத்தும் ஜிவிஜி யுகந்தருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.