நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்கள் அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர் என காங்கிரசை பிரதமர் மோடி சாடியுள்ளார்.
123-வது மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, சர்வதேச யோகா நாளில் விசாகபட்டிணத்தில் நடைபெற்ற பிரமாண்ட யோகாவை அனைவரும் கண்டனர் எனவும், அதிகாரம் அளிப்பதற்கான ஒரு வழியே யோகா என்றும் தெரிவித்தார்.
புனித யாத்திரைகள் உடலை ஒழுங்குப்படுத்துவதற்கும், மனதை தூய்மைப் படுத்துவதற்கும், அன்பையும், சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும் ஒரு சிறந்த வழியை உருவாக்கும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
எமர்ஜென்சி நேரத்தில் மக்கள் பெரிதும் சித்ரவதை செய்யப்பட்டனர் எனவும், துணிச்சலுடன் எதிர்த்து போராடியவர்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இன்று நாட்டின் 95 கோடி பேர் ஏதேனும், ஒரு சமூக நலன் பாதுகாப்பு திட்டத்தால் பயன் அடைகின்றனர் என தெரிவித்த பிரதமர் மோடி,
உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் தருவதுடன், நமது அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.