கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளை அடியாட்கள் மூலம் பெண்ணின் தாய் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த திவ்யா, சஞ்சய் ஆகியோர் 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனையறிந்த பெண்ணின் தாய், தனது மகளை அடியாட்கள் வைத்துக் கடத்த முயன்றுள்ளார்.
அவர்களிடம் இருந்து தப்பிய திவ்யா காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இது சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.