நெல்லையில் உள்ள உலகப்புகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மகா மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர், பிரதான கொடிமரத்திற்கு அருகே எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், மேள தாளங்கள் முழங்கக் கொடிமரத்தில் திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது.
கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.