காசாவின் ஜைடூன் பகுதியில் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையே 2023 முதல் மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் இதுவரை ஒரு லட்சம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காசாவின் ஜைடூன் பகுதியில் குடியிருப்பு கட்டடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.