லாக்கப் மரண சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத்தையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ், சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.