கூட்டணி குறித்த எதிர்மறை கருத்துக்களை பெரிதுபடுத்த போவதில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளதாக தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையுடன் நடைபோடும் என்றும், கூட்டணி குறித்த எதிர்மறை கருத்துக்களை பெரிதுபடுத்த போவதில்லை என்றும் அவர் கூறினார். பலம்பொருந்திய கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளதாகம் தமிழிசை கூறினார்.