நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ருக்மாங்கதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கடந்த 2021-ல் உத்தரவு பிறப்பித்த நிலையில், உத்தரவை அமல்படுத்தாததை எதிர்த்து வழக்கறிஞர் ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கானது நீதிபதி ஸ்ரீராம், சுந்தர்மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்ததையடுத்து, உத்தரவை அமல்படுத்தாதது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அதனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனர்.