காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!
Jul 28, 2025, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Web Desk by Web Desk
Jul 28, 2025, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசாவில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடுவதால், உணவு, குடிநீருக்காக ஒவ்வொரு நொடியும் மக்கள் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஐ.நா. விடுத்த எச்சரிக்கை, பிறநாடுகளின் வலியுறுத்தல் காரணமாக, தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதியன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில்  1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது.

ஹமாஸ் பயங்கரவாத குழுக்களை அழித்தொழிக்க, மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய படையெடுப்பு காசா முனையைச் சின்னபின்னமாக்கியுள்ளது.  உருக்குலைந்த கட்டடங்கள், தலைவிரித்தாடும் உணவுப் பஞ்சம்… பட்டினியால் பலியாகும் உயிர்கள்.. எனக் கற்பனைக்கு எட்டாத பாதிப்பு காசாவை முடக்கிப்போட்டுள்ளது.

தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், காசாவில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இஸ்ரேல் ஏவுகணை வீச்சு தற்போதும்கூட 53 பேர் உயிரைக் குடித்துள்ளது.

ஓயாத போரால் உயிரைப் பிடித்துக் கொண்டு முகாம்களில் தஞ்சமடைந்தோரின் நிலையோ இன்னும் பரிதாபம். தினம், தினம் பட்டினியால் வாடும் காசா மக்கள், வயிறு ஒட்டிய உடலுடன் உணவை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் நிலை தொடர்கிறது…. இந்தநிலையில், காசாவில் சர்வதேச ஊடகங்களுக்குச் செய்தி அனுப்பும் பத்திரிகையாளர் ஒருவர் பஞ்சத்தால் தனது கேமராக்களை விற்க முன்வந்துள்ளதும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

உணவுப் பஞ்சத்தால், காசாவில் மூன்றில் ஒருவர் உணவு இல்லாமல் பட்டினியால் வாடுவதாகவும், ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்து வருவதால், 90 ஆயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாகவும் ஐ.நா.விவரித்துள்ளது.

உலக நாடுகள் காசாவுக்கு அனுப்பும் உணவுப் பொருட்கள், நிவாரண உதவிகள் இஸ்ரேல் வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், அவை பாதிக்கப்பட்டோரைச் சென்று சேர்ந்ததாகத் தெரியவில்லை. காசாவுக்குள் உதவிப் பொருட்கள் செல்வதற்குத் தடையை ஏற்படுத்த வேண்டாம் என இஸ்ரேலை, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

காசாவில் மனிதாபிமான பேரழிவு நடந்து கொண்டிக்கும் நிலையில், உலக நாடுகளின் வலியுறுத்தலால், நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. அல்-மவாஷி, டெய்ர் அல்-பலாஹ், காசா சிட்டியில் காலை 10 மணி முதல்  இரவு 8 மணி வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும், அதற்குள் உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: gazaகாசாபோர் நிறுத்தம்Severe food shortage in Gaza: 10-hour daily ceasefireகாசாவில் கடும் உணவுப் பஞ்சம்
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காளியண்ணன் பெயர் வைக்க வேண்டும் – அண்ணாமலை

Next Post

சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய் : ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை!

Related News

துருக்கி காட்டுத்தீ!

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

ரஷ்யா – வடகொரியா இடையே நேரடி விமான சேவை தொடக்கம்!

காசாவில் தினமும் 10 மணி நேரம் தாக்குதல் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!

இலங்கையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானை மீட்பு!

இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்து – 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள்!

காஞ்சிபுரம் : விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

கோவை : தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம், கராத்தே செய்து மாணவர்கள் சாதனை!

ப. சிதம்பரத்திற்கு பாஜக கண்டனம்!

தூத்துக்குடி : உணவு பார்சலுக்கு பணம் கேட்ட ஊழியருக்கு மிரட்டல்!

மு.க.முத்து மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!

சேலம் அரசு மருத்துவமனையில் எலிகள் அட்டகாசம்!

முன்னாள் திமுக எம்.பி திரவியத்திற்கு எதிரான வழக்கு : காவல் ஆய்வாளர்கள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்கா : வணிக வளாகத்தில் மர்ம நபர் தாக்குதல் – 11 பேர் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies