காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!
Jan 14, 2026, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Murugesan M by Murugesan M
Jul 28, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசாவில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடுவதால், உணவு, குடிநீருக்காக ஒவ்வொரு நொடியும் மக்கள் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஐ.நா. விடுத்த எச்சரிக்கை, பிறநாடுகளின் வலியுறுத்தல் காரணமாக, தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதியன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில்  1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது.

ஹமாஸ் பயங்கரவாத குழுக்களை அழித்தொழிக்க, மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய படையெடுப்பு காசா முனையைச் சின்னபின்னமாக்கியுள்ளது.  உருக்குலைந்த கட்டடங்கள், தலைவிரித்தாடும் உணவுப் பஞ்சம்… பட்டினியால் பலியாகும் உயிர்கள்.. எனக் கற்பனைக்கு எட்டாத பாதிப்பு காசாவை முடக்கிப்போட்டுள்ளது.

தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், காசாவில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இஸ்ரேல் ஏவுகணை வீச்சு தற்போதும்கூட 53 பேர் உயிரைக் குடித்துள்ளது.

ஓயாத போரால் உயிரைப் பிடித்துக் கொண்டு முகாம்களில் தஞ்சமடைந்தோரின் நிலையோ இன்னும் பரிதாபம். தினம், தினம் பட்டினியால் வாடும் காசா மக்கள், வயிறு ஒட்டிய உடலுடன் உணவை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் நிலை தொடர்கிறது…. இந்தநிலையில், காசாவில் சர்வதேச ஊடகங்களுக்குச் செய்தி அனுப்பும் பத்திரிகையாளர் ஒருவர் பஞ்சத்தால் தனது கேமராக்களை விற்க முன்வந்துள்ளதும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

உணவுப் பஞ்சத்தால், காசாவில் மூன்றில் ஒருவர் உணவு இல்லாமல் பட்டினியால் வாடுவதாகவும், ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்து வருவதால், 90 ஆயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாகவும் ஐ.நா.விவரித்துள்ளது.

உலக நாடுகள் காசாவுக்கு அனுப்பும் உணவுப் பொருட்கள், நிவாரண உதவிகள் இஸ்ரேல் வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், அவை பாதிக்கப்பட்டோரைச் சென்று சேர்ந்ததாகத் தெரியவில்லை. காசாவுக்குள் உதவிப் பொருட்கள் செல்வதற்குத் தடையை ஏற்படுத்த வேண்டாம் என இஸ்ரேலை, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

காசாவில் மனிதாபிமான பேரழிவு நடந்து கொண்டிக்கும் நிலையில், உலக நாடுகளின் வலியுறுத்தலால், நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. அல்-மவாஷி, டெய்ர் அல்-பலாஹ், காசா சிட்டியில் காலை 10 மணி முதல்  இரவு 8 மணி வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும், அதற்குள் உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: gazaகாசாபோர் நிறுத்தம்Severe food shortage in Gaza: 10-hour daily ceasefireகாசாவில் கடும் உணவுப் பஞ்சம்
ShareTweetSendShare
Previous Post

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

Next Post

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies