விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!
Jan 14, 2026, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Jul 28, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் அருகே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம் பி ராஜேஷ்குமாரின் தூண்டுதலின் பேரில் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் இப்பணிகள் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, அரூர் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தலைமுறை தலைமுறையாக அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

குன்றுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை உள்ளடக்கிய விவசாய நிலங்களில் 800 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவிப்பு வெளியானது தொடங்கி அரசாணை பிறப்பிக்கும் வரை தொடர் எதிர்ப்புகளை தெரிவித்தும் சிப்காட் அமைக்கும் பணிகளை தொடர்வது கண்டனத்திற்குரியது என விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விளை நிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்துக் கொண்டு வரப்படும் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அப்பகுதி மக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக எம் பி ராஜேஷ்குமார் மற்றும், அமைச்சர் மதிவேந்தன் ஆகிய இருவரின் நெருக்கடியின் பேரிலேயே விளைநிலங்களைத் தரிசு நிலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாக விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு அதற்கு முரணாகச் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசின் விவசாய விரோதப் போக்கு தொடருமேயானால் அடுத்துவரும் தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வியை வழங்கவும் அப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.

தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வந்த நிலங்களை திடீரென தரிசு நிலம் என அறிவிப்பதும், அதில் சிப்காட் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியிருப்பதும் ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு நிர்வாகமே அதனைத் திட்டமிட்டு அழிக்கலாமா என்ற கேள்வியும் அனைவர் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: கொந்தளிக்கும் விவசாயிகள்நாமக்கல்விவசாயிகள்Chipkot Industrial Estate on agricultural lands: Farmers are upsetவிளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை
ShareTweetSendShare
Previous Post

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

Next Post

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies