விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!
Jul 30, 2026, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Jul 28, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் அருகே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம் பி ராஜேஷ்குமாரின் தூண்டுதலின் பேரில் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் இப்பணிகள் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, அரூர் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தலைமுறை தலைமுறையாக அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

குன்றுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை உள்ளடக்கிய விவசாய நிலங்களில் 800 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவிப்பு வெளியானது தொடங்கி அரசாணை பிறப்பிக்கும் வரை தொடர் எதிர்ப்புகளை தெரிவித்தும் சிப்காட் அமைக்கும் பணிகளை தொடர்வது கண்டனத்திற்குரியது என விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விளை நிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்துக் கொண்டு வரப்படும் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அப்பகுதி மக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக எம் பி ராஜேஷ்குமார் மற்றும், அமைச்சர் மதிவேந்தன் ஆகிய இருவரின் நெருக்கடியின் பேரிலேயே விளைநிலங்களைத் தரிசு நிலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாக விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு அதற்கு முரணாகச் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசின் விவசாய விரோதப் போக்கு தொடருமேயானால் அடுத்துவரும் தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வியை வழங்கவும் அப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.

தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வந்த நிலங்களை திடீரென தரிசு நிலம் என அறிவிப்பதும், அதில் சிப்காட் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியிருப்பதும் ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு நிர்வாகமே அதனைத் திட்டமிட்டு அழிக்கலாமா என்ற கேள்வியும் அனைவர் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: கொந்தளிக்கும் விவசாயிகள்நாமக்கல்விவசாயிகள்Chipkot Industrial Estate on agricultural lands: Farmers are upsetவிளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை
ShareTweetSendShare
Previous Post

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

Next Post

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies