விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!
Sep 13, 2026, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Jul 28, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல் அருகே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம் பி ராஜேஷ்குமாரின் தூண்டுதலின் பேரில் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் இப்பணிகள் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, அரூர் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தலைமுறை தலைமுறையாக அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

குன்றுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை உள்ளடக்கிய விவசாய நிலங்களில் 800 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவிப்பு வெளியானது தொடங்கி அரசாணை பிறப்பிக்கும் வரை தொடர் எதிர்ப்புகளை தெரிவித்தும் சிப்காட் அமைக்கும் பணிகளை தொடர்வது கண்டனத்திற்குரியது என விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விளை நிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்துக் கொண்டு வரப்படும் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அப்பகுதி மக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக எம் பி ராஜேஷ்குமார் மற்றும், அமைச்சர் மதிவேந்தன் ஆகிய இருவரின் நெருக்கடியின் பேரிலேயே விளைநிலங்களைத் தரிசு நிலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாக விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு அதற்கு முரணாகச் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசின் விவசாய விரோதப் போக்கு தொடருமேயானால் அடுத்துவரும் தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வியை வழங்கவும் அப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.

தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வந்த நிலங்களை திடீரென தரிசு நிலம் என அறிவிப்பதும், அதில் சிப்காட் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியிருப்பதும் ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு நிர்வாகமே அதனைத் திட்டமிட்டு அழிக்கலாமா என்ற கேள்வியும் அனைவர் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: கொந்தளிக்கும் விவசாயிகள்நாமக்கல்விவசாயிகள்Chipkot Industrial Estate on agricultural lands: Farmers are upsetவிளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை
Share
Tweet
SendShare
Previous Post

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

Next Post

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies