பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோரைக் கைது செய்யக் கோரி 3வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும், மென்பொறியாளருமான கவின் செல்வகணேஷ் என்பவர் கடந்த 27ஆம் தேதி நெல்லை கே.டி.நகரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கொலை தொடர்பாகப் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த சுர்ஜித் என்பவர் தனது சகோதரியைக் காதலித்ததால் கவினை வெட்டி கொலை செய்ததாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுர்ஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலைக்குத் தூண்டுதலாக சுர்ஜித்தின் பெற்றோர் செயல்பட்டதாகவும், அவர்களையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்றும், கவினின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பெண்ணின் பெற்றோரைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி கவின் உறவினர்கள் 3வது நாளதொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதியையும் ஏற்றுக்கொள்ளாத உறவினர்களிடம், காவல் உயர் அதிகாரிகள் நடத்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், சிறையில் உள்ள சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.