உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!
Nov 5, 2025, 09:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

Web Desk by Web Desk
Jul 31, 2025, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம், ஜப்பானின் ஹிரோசிமா பகுதியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டைப்போல்  14 ஆயிரத்து 300 மடங்கு வீரியமானது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த எச்சரிக்கை, ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவை நடுநடுங்க வைத்துள்ளது.

1945ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி 80 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும் அப்பகுதியில் அணுகுண்டின் தாக்கம் குறைந்தபாடில்லை.

அணுகுண்டுவீச்சால், ஹிரோஷிமாவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாகியில் 74 ஆயிரம் பேரும் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்த பெரும்பாலான மக்கள் அணு கதிர்வீச்சின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டது.

இந்நிலையில், ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த பூகம்பத்தை,  ஹிரோஷிமாவில் வீசப்பட்ட “லிட்டில் பாய்” அணுகுண்டை போல், 14 ஆயிரத்து 300 மடங்கு வீரியமானது என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். ரிக்டரில் 8.8 ஆக பதிவான இந்த பூகம்பம்  ஒரு நகரத்தை ஒரு நொடியில் சின்னாபின்னமாக்கும் ஆற்றல் கொண்டது.

8.8 ரிக்டர் அளவு பூகம்பம் என்பது, 60 லட்சத்து 27 ஆயிரம் டன் ட்ரைநைட்ரோடொலுயீன் (TNT)வெடிமருந்துக்கு ஒப்பானது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜப்பானும், ரஷ்யாவும் வளர்ந்த நாடுகள் என்றாலும், நிலநடுக்கத்தால் அந்நாடுகள் அடையும்  உயிரிழப்பும், பொருட்சேதமும் அதிகம் என்றே கூறப்படுகிறது.

ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் உள்ள டோஹோகு பிராந்தியத்தில் 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

பூகம்பமும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியும் 20 ஆயிரம் பேரின் உயிரைக் குடித்தது. இதேபோன்று ரஷ்யாவில் கம்சட்கா பகுதியும் அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் பகுதியாகப் பார்க்கப்படுகிறது. 2010ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கம், 10 ஆயிரம் ஹிரோஷிமா அணுக்குண்டுகளுக்கு இணையாகப் பார்க்கப்பட்டது.

இயற்கைப் பேரழிவுகள் எதிர்பாராத, கணிக்க முடியாத, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு  அழிவைத்  தரக்கூடியவை. அவற்றை முன்கூட்டியே கணித்தாலும், சேதத்தைத் தடுக்க முடியாது என்பதால், ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் அவற்றை எண்ணி கவலை கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

Tags: earthquakeThe earthquake that shook the world: equivalent to 14300 atomic bombsearthquakes in Russia
ShareTweetSendShare
Previous Post

ஓடும் பேருந்தில் ஒருவரை இரும்பு ராடால் தாக்கிய கும்பல் : ஒருவர் கைது!

Next Post

இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஸ்மிருதி மந்தனா!

Related News

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

அமெரிக்காவில் பாத்திரம் கழுவும் வேலைக்காக சேர்ந்த நபர் ஓனராக மாறிய ஆச்சரியம்!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எம்எல்ஏ அருள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – பிரதமர் மோடி

எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம் கோவையில் நடந்துள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை!

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு!

வாக்குமூலத்தை பதிவு செய்ய கிரிக்கெட் வீரர் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை – நீதிபதிகள்

AI பயன்படுத்தப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைகிறது – செல்வராகவன்

மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies