ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜரானார்.
சட்ட விரோதமாகப் பந்தயம் நடத்தும் இணையதளங்களைப் பிரபலங்கள் ஆதரிப்பதால், பயனர்கள் ஈர்க்கப்பட்டு, பணத்தை இழப்பதாகப் புகார் எழுந்தது.
இத்தகைய விளம்பரங்களில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவர கொண்டா, ராணா டகுபதி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிந்தது.
இதையடுத்து இன்று ஆஜராகுமாறு நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வழக்கறிஞருடன் பிரகாஷ்ராஜ் ஆஜராகினார்.