"நிசார்' வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!
Jan 14, 2026, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Murugesan M by Murugesan M
Aug 2, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மையில் இஸ்ரோவும் நாசாவும் இணைந்து அனுப்பிய நிசார் செயற்கைக்கோளை வடிவமைப்பதில், சென்னை ஐஐடியின் பேராசிரியர் ஒருவர் மிக முக்கிய பங்களிப்பாற்றியுள்ளார். அவர் யார்? அவரின் பங்களிப்பென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

புவியின் மேற்பரப்பை முழுமையாகக் கண்காணிக்கும் நோக்கில், ஜூலை 30ம் தேதி  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலம் நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.  இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கிய இந்த செயற்கைக்கோளின் மதிப்பு 12 ஆயிரம் கோடி ரூபாய்.

புவியைக் கண்காணிக்க இதற்கு முன்னரும் ஏராளமான செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைக் கொண்டு புவியின் மேற்பரப்பைத் துல்லியமாகப் படம் எடுப்பதில் சிக்கல் இருந்து வந்தது. மேகமூட்டம் உள்ளிட்ட காரணங்களில் செயற்கைக்கோளின் செயல்பாடு பாதிக்கப்பட்டது.

ஆனால், இந்த குறையை, சென்னை ஐஐடியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் நீக்கியுள்ளார். அவரது பெயர், மணிகண்டன் மாத்தூர். விண்வெளி பொறியியல் துறையைச் சேர்ந்த அவர், இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகளுடன் இணைந்து நிசார் செயற்கைக்கோளின் வடிவமைப்பில் பணியாற்றினார்.

அவர் வழங்கிய ஆலோசனைகள் மூலம், புவியின் மேற்பரப்பில்  10 மீட்டர் அளவிலான சிறிய இடங்களைக் கூட துல்லியமாகப் படம் பிடிக்கும் வகையில் நிசார் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சிறிய இடத்தில் நிகழும் சில சென்டிமீட்டர் அளவிலான மாற்றங்களைக்கூட நுட்பமாக ஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், வட இந்தியப் பெருங்கடலோர பகுதிகளைத் துல்லியமாகப் படம் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், கடலோரப் பகுதிகளை எப்போது, எந்த எண்ணிக்கையில் படங்கள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பேராசிரியர் மணிகண்டன் ஆலோசனை வழங்கியுள்ளார். நிசார் செயற்கைக்கோள் ஒருமுறை படம் எடுத்தால், அந்த இடத்தை அடுத்த 12 நாட்கள் கழித்து மீண்டும் படம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி நிசார் செயற்கைக்கோளின் செயல்பாட்டில் பேராசிரியர் மணிகண்டனின் பங்கு அளப்பறியது.

ஆலோசனை வழங்கியதுடன் பேராசிரியர் மணிகண்டனின் பணி முடியவில்லை. செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களை, அவரும் அவரது குழுவினரும் ஆய்வு செய்ய உள்ளனர். குறிப்பாக, வங்காள விரிகுடாவில் நதி நீர் கலக்கும் விதம் குறித்தும், இந்தியக் கடலோரப் பகுதியில் ஏற்படும் உள் ஈர்ப்பு அலைகள் குறித்தும், இவற்றால் வானிலையில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்கிறது என்பது குறித்தும், ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

இது குறித்துப் பேட்டியளித்த அவர், செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு என்னென்ன பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது குறித்த புதிய விழிப்புணர்வு இனி இந்திய அறிவியல் சமூகத்தில் ஏற்பட உள்ளதாகக் கூறினார். நிசார் செயற்கைக்கோளை உருவாக்குவதில் துணைநின்ற பேராசிரியர் மணிகண்டனால், ஐஐடி மெட்ராஸ் மட்டுமல்ல, தமிழகமும் பெருமை கொள்கிறது.

Tags: நாசாஜிஎஸ்எல்வி எப் -16 ராக்கெட்IIT Chennai professor who played a key role in designing "Nisar"நிசார்சென்னை ஐஐடி பேராசிரியர்இஸ்ரோIIT Chennai
ShareTweetSendShare
Previous Post

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

Next Post

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies