அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!
Sep 20, 2025, 04:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

Web Desk by Web Desk
Aug 4, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ராணுவம் கடந்த ஒரு வாரத்தில் 3 முக்கிய ஆப்ரேஷன்களை நடத்தி, 8 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது. இந்நிலையில், அந்த ஆப்ரேஷன்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற் பிறகு, ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் முன்பை காட்டிலும் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தீவிரவாதிகூட இனி இந்திய எல்லைக்குள் நுழையக் கூடாது என்ற நோக்கில், எல்லை பாதுகாப்புப் படையினர், இரவு பகலாகத் தீவிர ரோந்து பணிகளிலும், தேடுதல் வேட்டைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இந்திய ராணுவத்தால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 3 ஆப்ரேஷன் நடவடிக்கைகள், தீவிரவாதிகளைத் தேடி தேடி களையெடுத்துள்ளன. அதில் முதல் நடவடிக்கையின் பெயர்,ஆப்ரேஷன் மகாதேவ்.

லஷ்கா்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் ரகசிய செய்திகளை அனுப்பப் பயன்படுத்தும் கருவி ஒன்றின் சிக்னல் ஹாா்வான் பகுதியில் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து வந்த இந்திய ராணுவத்தினர், ஜூலை 27ஆம் தேதி ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையைத் தொடங்கினர்.

முல்நாா் என்ற கிராமத்தைச் சுற்றிவளைத்த அவர்கள், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவராகக் கருதப்படும் சுலைமான் ஷா உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர்.

இந்திய ராணுவம் மேற்கொண்ட இரண்டாவது நடவடிக்கையின் பெயர், ஆப்ரேஷன் சிவசக்தி. இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை குறிவைத்து இந்த ஆப்ரேஷன் நடத்தப்பட்டது. ஜூலை 30ம் தேதி நடத்தப்பட்ட அந்த ஆப்ரேஷன் நடவடிக்கையின்படி, ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது, இரண்டு பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து உடனடியாக ஆப்ரேஷன் அகால் என்ற மற்றொரு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி இந்த ஆப்ரேஷன் மேற்கொள்ளப்பட்டது. இரவு பகலாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இப்படி, கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து 3 ஆப்ரேஷன்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதன்மூலம், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் உள்ளிட்ட 8 பயங்கரவாதிகளையும் களையெடுத்துள்ளது.

Tags: indian armypm modi newsஇந்திய ராணுவம்Operation Sindoor3 consecutive operations: Terrorists taken out3 ஆபரேஷன்
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Related News

மேற்கு வங்கம் : 10 லட்சம் செய்திதாள்களை கொண்டு துர்கா பூஜை பந்தல் அமைப்பு!

அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!

பக்ராம் விமான தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா : விட்டுதர மறுக்கும் ஆப்கான் – நடக்கப்போவது என்ன?

பாகிஸ்தானை தோலுரிக்கும் பயங்கரவாதிகள் : அம்பலமான பொய் முகம் – மீண்டும் சாம்பல் பட்டியலில் இணையுமா?

அம்பலப்படுத்திய யாசின் மாலிக் : ஹபீஸ் சயீதை சந்தித்ததற்காக நன்றி கூறிய மன்மோகன்சிங்!

மகாராஷ்டிரா : வெர்சோவா கடற்கரையை தூய்மைப்படுத்திய தன்னார்வலர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தை – 6 பேர்  கைது!

1960 ஆம் ஆண்டில் இருந்த உலகம் இன்றைய உலகம் அல்ல : இந்திய தூதர் அனுபமா சிங்

தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிட்னி மோசடி வழக்கு – அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மோதலை எப்படி முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்தியாவிடம் கற்க வேண்டும் – விமானப்படை  தளபதி ஏ பி சிங்

சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ‘ரிங் மெயின் திட்டம்’!

டெல்லி : தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பள்ளி குழந்தைகள் ரயில் மோதி பலி!

வயதான தம்பதியை விடுதலை செய்த தாலிபான் அரசு!

தேனி : மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

ஸ்ரீவில்லிபுத்தூர் : தென்திருப்பதி என்று அழைக்கபடும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies