அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!
Aug 7, 2026, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

Murugesan M by Murugesan M
Aug 4, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய ராணுவம் கடந்த ஒரு வாரத்தில் 3 முக்கிய ஆப்ரேஷன்களை நடத்தி, 8 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது. இந்நிலையில், அந்த ஆப்ரேஷன்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற் பிறகு, ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் முன்பை காட்டிலும் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தீவிரவாதிகூட இனி இந்திய எல்லைக்குள் நுழையக் கூடாது என்ற நோக்கில், எல்லை பாதுகாப்புப் படையினர், இரவு பகலாகத் தீவிர ரோந்து பணிகளிலும், தேடுதல் வேட்டைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இந்திய ராணுவத்தால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 3 ஆப்ரேஷன் நடவடிக்கைகள், தீவிரவாதிகளைத் தேடி தேடி களையெடுத்துள்ளன. அதில் முதல் நடவடிக்கையின் பெயர்,ஆப்ரேஷன் மகாதேவ்.

லஷ்கா்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் ரகசிய செய்திகளை அனுப்பப் பயன்படுத்தும் கருவி ஒன்றின் சிக்னல் ஹாா்வான் பகுதியில் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து வந்த இந்திய ராணுவத்தினர், ஜூலை 27ஆம் தேதி ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையைத் தொடங்கினர்.

முல்நாா் என்ற கிராமத்தைச் சுற்றிவளைத்த அவர்கள், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவராகக் கருதப்படும் சுலைமான் ஷா உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர்.

இந்திய ராணுவம் மேற்கொண்ட இரண்டாவது நடவடிக்கையின் பெயர், ஆப்ரேஷன் சிவசக்தி. இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை குறிவைத்து இந்த ஆப்ரேஷன் நடத்தப்பட்டது. ஜூலை 30ம் தேதி நடத்தப்பட்ட அந்த ஆப்ரேஷன் நடவடிக்கையின்படி, ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது, இரண்டு பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து உடனடியாக ஆப்ரேஷன் அகால் என்ற மற்றொரு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி இந்த ஆப்ரேஷன் மேற்கொள்ளப்பட்டது. இரவு பகலாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இப்படி, கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து 3 ஆப்ரேஷன்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதன்மூலம், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் உள்ளிட்ட 8 பயங்கரவாதிகளையும் களையெடுத்துள்ளது.

Tags: indian armypm modi newsஇந்திய ராணுவம்Operation Sindoor3 consecutive operations: Terrorists taken out3 ஆபரேஷன்
Share
Tweet
SendShare
Previous Post

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Related News

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies