பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!
Jan 14, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Aug 4, 2025, 09:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டபோது, அவரது பாதுகாப்பு அதிகாரியாகப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் யார்? தற்போது அவர் குறித்து பலரும் பேசி வருவது ஏன்? என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஜூலை 23ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்துக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அங்கு, அந்நாட்டுப் பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்த அவர், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல முக்கிய  ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

பிரதமரின் இந்த பயணமும், அவர் மேற்கொண்ட ஒப்பந்தங்களும் எந்த அளவுக்குக் கவனம் பெற்றதோ, அதே அளவுக்குக் கவனத்தை மோடிக்குப் பாதுகாப்பு வழங்கிய பெண் அதிகாரியும் பெற்றுள்ளார்.

பிரதமருக்கு SPG எனப்படும் சிறப்புக் குழு பாதுகாப்பு அளித்து வருகிறது.  உள்நாடு, வெளிநாடு எனப் பிரதமர் எங்குச் சென்றாலும் இந்த குழுவினரும் உடன்செல்வார்கள். பிரதமர் செல்லும் இடங்களைப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதும், பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்வதும்தான் SPG அதிகாரிகள் பிரதான வேலை. சுருக்கமாகச் சொல்வதென்றால், பிரதமர் மீது சிறு துரும்பு கூடப் படாமல் பார்த்துக்கொள்பவர்கள் இவர்கள்தான்.

இத்தகைய எஸ்.பி.ஜி. பிரிவில் சேர்வது எளிதான காரியமல்ல. காவல்துறையில் சேரவே கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்றால், எஸ்.பி.ஜி. பிரிவில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து விவரிக்கத் தேவையில்லை. உடல் சார்ந்த பயிற்சிகளைத் தாண்டி, நெருக்கடியான சூழலில் எவ்வாறு செயல்படுவது, ஆபத்துகளை முன்னரே எப்படிக் கணிப்பது உள்ளிட்ட பல பயிற்சிகள் எஸ்.பி.ஜி. அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

இந்த குழுவைச் சேர்ந்த ஆண் அதிகாரிகள் மட்டுமே இதுவரை பிரதமருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தார்கள். ஆனால், இங்கிலாந்து பயணத்தின்போது முதன்முறையாகப் பெண் அதிகாரி ஒருவர் பிரதமருக்குப் பாதுகாப்பு அளித்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

அந்த பெண் அதிகாரியின் பெயர் அடாசோ கபேசா. அவரது பூர்வீகம் மணிப்பூர். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் SSB எனப்படும், சஷாஸ்திர சீமா பால் அமைப்பில் இணைந்து தனது பயணத்தை அவர் தொடங்கினார்.

தற்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் 55வது பட்டாலியனில் அவர் பணியாற்றி வருகிறார். இங்கிலாந்து பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் சென்ற இவர், பிரதமருக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தார்.

தேசத்தின் உயரிய தலைவர்களில் ஒருவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணி, பெண் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்புத் துறையில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதற்கு அடாசோ கபேசா முன்னுதாரணமாக உள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடாசோ கபேசாவால் கவரப்பட்ட பல பெண்கள், பாதுகாப்புப் பணிகளில் சேர்ந்து பணியாற்ற ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.

Tags: பிரதமர் மோடிThe female officer who provided security to the Prime Minister: A new chapter in history beginsஎஸ்.பி.ஜிSPG
ShareTweetSendShare
Previous Post

கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க…! : சுருங்கும் IT வேலைகள் – எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Next Post

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies