பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!
Sep 20, 2025, 11:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

Web Desk by Web Desk
Aug 4, 2025, 09:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டபோது, அவரது பாதுகாப்பு அதிகாரியாகப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் யார்? தற்போது அவர் குறித்து பலரும் பேசி வருவது ஏன்? என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஜூலை 23ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்துக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அங்கு, அந்நாட்டுப் பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்த அவர், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல முக்கிய  ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

பிரதமரின் இந்த பயணமும், அவர் மேற்கொண்ட ஒப்பந்தங்களும் எந்த அளவுக்குக் கவனம் பெற்றதோ, அதே அளவுக்குக் கவனத்தை மோடிக்குப் பாதுகாப்பு வழங்கிய பெண் அதிகாரியும் பெற்றுள்ளார்.

பிரதமருக்கு SPG எனப்படும் சிறப்புக் குழு பாதுகாப்பு அளித்து வருகிறது.  உள்நாடு, வெளிநாடு எனப் பிரதமர் எங்குச் சென்றாலும் இந்த குழுவினரும் உடன்செல்வார்கள். பிரதமர் செல்லும் இடங்களைப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதும், பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்வதும்தான் SPG அதிகாரிகள் பிரதான வேலை. சுருக்கமாகச் சொல்வதென்றால், பிரதமர் மீது சிறு துரும்பு கூடப் படாமல் பார்த்துக்கொள்பவர்கள் இவர்கள்தான்.

இத்தகைய எஸ்.பி.ஜி. பிரிவில் சேர்வது எளிதான காரியமல்ல. காவல்துறையில் சேரவே கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்றால், எஸ்.பி.ஜி. பிரிவில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து விவரிக்கத் தேவையில்லை. உடல் சார்ந்த பயிற்சிகளைத் தாண்டி, நெருக்கடியான சூழலில் எவ்வாறு செயல்படுவது, ஆபத்துகளை முன்னரே எப்படிக் கணிப்பது உள்ளிட்ட பல பயிற்சிகள் எஸ்.பி.ஜி. அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

இந்த குழுவைச் சேர்ந்த ஆண் அதிகாரிகள் மட்டுமே இதுவரை பிரதமருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தார்கள். ஆனால், இங்கிலாந்து பயணத்தின்போது முதன்முறையாகப் பெண் அதிகாரி ஒருவர் பிரதமருக்குப் பாதுகாப்பு அளித்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

அந்த பெண் அதிகாரியின் பெயர் அடாசோ கபேசா. அவரது பூர்வீகம் மணிப்பூர். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் SSB எனப்படும், சஷாஸ்திர சீமா பால் அமைப்பில் இணைந்து தனது பயணத்தை அவர் தொடங்கினார்.

தற்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் 55வது பட்டாலியனில் அவர் பணியாற்றி வருகிறார். இங்கிலாந்து பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் சென்ற இவர், பிரதமருக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தார்.

தேசத்தின் உயரிய தலைவர்களில் ஒருவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணி, பெண் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்புத் துறையில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதற்கு அடாசோ கபேசா முன்னுதாரணமாக உள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடாசோ கபேசாவால் கவரப்பட்ட பல பெண்கள், பாதுகாப்புப் பணிகளில் சேர்ந்து பணியாற்ற ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.

Tags: பிரதமர் மோடிThe female officer who provided security to the Prime Minister: A new chapter in history beginsஎஸ்.பி.ஜிSPG
ShareTweetSendShare
Previous Post

கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க…! : சுருங்கும் IT வேலைகள் – எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Next Post

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

Related News

ஐ.நா சபையில் பாலஸ்தீன அதிபர் காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் – இந்தியா ஆதரவு!

தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி!

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை – திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

ஜிஎஸ்டி வருவாய் சுமார் ரூ.22 லட்சம் கோடியாக உயர்வு – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

எச்-1பி விசா வருடாந்திர விண்ணப்பக் கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்வு – ட்ரம்ப் உத்தரவு!

புதுக்கோட்டையில் குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி – முக்கிய ஆவணங்களை குப்பையில் போட்ட ஊழியர்கள்!

புரட்டாசி மாத பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

இன்றைய தங்கம் விலை!

திண்டுக்கலில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி தொடக்கம்!

பல்லாவரத்தில் தேர்வு நடைபெற்ற போது அரசுப்பள்ளியில் அரசு விழா!

தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை – சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை!

சேரன்மாதேவி அருகே மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா!

பிரதமர் மோடி குறித்த குறும்படம் – அனைவரும் பார்க்க வேண்டும் என வினோஜ் பி.செல்வம் அழைப்பு!

பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள் – கோவையில் ஓவிய கண்காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies