குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் - கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?
Mar 19, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் சரிந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்த அந்நாடு படாதபாடு பட்டு வருகிறது. மேலும், குழந்தைகள் பெற்றுக்கொள்ளக் கோடிகளைக் கொட்டி பெற்றோர்களை ஊக்குவித்து வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியில் சீனா 2வது இடத்தில் உள்ளது. இன்றைய தேதிக்கு அந்நாட்டில் சுமார் 141 கோடி மக்கள் உள்ளன. மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் இருந்தபோது, பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. மக்கள் தொகை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கும் தள்ளப்பட்டது.

எனவே, ஒரு குழந்தை கொள்கையை அந்நாடு அறிவித்தது. அதன்படி, ஒரு தம்பதி ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும். மீறி 2வது முறை கருத்தரித்தால், கடுமையான அபராதம் விதிக்கப்படும். கட்டாய கருக்கலைப்பு, கருத்தடை உள்ளிட்டவையும் செய்யப்படும். ஆனால், இதெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரைதான்.

தற்போது நிலைமையே வேறு. சீன அரசு, தனது குடிமக்களிடம், “எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளுங்கள். குறைந்தது ஒரு குழந்தையையாவது பெற்றுக்கொள்ளுங்கள். ப்ளீ்ஸ்” எனக் கெஞ்சி வருகிறது. ஆனால், சீன மக்கள் அதற்கெல்லாம் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை.

விளைவு, சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்து வருகிறது. இப்படியே சென்றால் எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாகச் சரிந்துவிடும். முதியவர்கள் மட்டுமே அங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கும் நிலைமை ஏற்படும். இதற்கான அறிகுறிகள் தற்போதே தென்படத் தொடங்கிவிட்டன. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகச் சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது.

எனவே, நாட்டு மக்களைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளச் செய்யும் வகையில் சீன அரசு, பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது. பல்வேறு சலுகைகளையும் அறிவித்தது. ம்ஹூம்.. சீன மக்கள் அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை.

எனவே, குழந்தை பெற்றுக்கொண்டால் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் தலா 44 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 கோடி தம்பதிகளுக்கு இந்த மானிய தொகையை வழங்க சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயைச் சீன அரசு செலவிட உள்ளது. இதன் மூலம் குழந்தை வளர்ப்புக்கு அதிக தொகை செலவிடும் நாடுகளில் ஒன்றாகச் சீனா உருவெடுத்துள்ளது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். சீன மக்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள் என்று?.

வேலைப்பளு, வேலையின்மை, அதிக வீட்டு வாடகை, அதிகரிக்கும் கல்வி செலவு, தனிப்பட்ட சுதந்திரம்  என பல்வேறு காரணங்களை அவர்கள் பட்டியலிடுகின்றனர். ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க லட்சக்கணக்கில் செலவாகும் எனவும், அரசு வழங்கும் 44 ஆயிரம் ரூபாய்க்காக எல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் சீன இளைஞர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இருந்தாலும், தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, சீனா அரசு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

Tags: china news todayRs. 44 thousands subsidy for having a child - will China's new scheme help?
ShareTweetSendShare
Previous Post

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies