புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காவல்நிலையம் செல்பவர்கள் காவு வாங்கப்படுகிறார்களா?  என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கோவை மாவட்டம் பெரிய கடைவீதி காவல்நிலையத்திற்கு நேற்றிரவு புகாரளிக்க வந்தவர் மேல்தளத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், இன்று காலையில் பணிக்கு வந்த காவலர்கள் தான் அதைக் கண்டறிந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, பலத்த சந்தேகத்தையும் எழுப்புகிறது.

ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்த தமிழகக் காவல்துறையினரின் மூர்க்கத்தனத்திற்கு பல அப்பாவிகள் பலியாகியுள்ள நிலையில், ஆளும் அரசின் மீதோ அதன் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சட்டம் ஒழுங்கின் மீதோ மக்களுக்கு துளியும் நம்பிக்கையில்லை.

எந்தக் கட்டுக்கதைகளைக் கேட்கவும் மக்கள் தயாராக இல்லை. திறனற்ற திமுக ஆட்சியில் அதிகார மதம் பிடித்த அதிகாரிகளின் கையில் தமிழகம் சிக்குண்டுள்ளதை மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, புகாரளிக்க வந்த நபர் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் இருந்தது எப்படி யாருக்கும் தெரியாமல் போனது? புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? எந்தக் காவலர்களும் அதை கவனிக்கவில்லையா? முக்கியமாக புகாரளிக்க வந்தவரிடம் அவரது முழு விலாசத்தையும் பெறுவது தானே முறை, அப்படியிருக்கையில் இறந்தவர் யாரென்றே தெரியவில்லை எனக் காவல்துறை கூறுவது எதை மூடி மறைப்பதற்காக? யாரென்றே தெரியாத ஒருவருக்கு உதவி ஆய்வாளர் அறை வரை எப்படி அனுமதி வழங்கப்பட்டது? காலை பத்து மணி வரை சுத்தம் செய்வதற்காகக் கூட யாரும் உதவி ஆய்வாளரின் அறை பக்கம் ஒதுங்கவில்லையா? ஒருவேளை விசாரணை என்ற பெயரில் அவரும் அடித்துக் கொல்லப்பட்டாரா? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலினின் கடமை.

இல்லையேல் கட்டப்பஞ்சாயத்து காவல்துறைக்கு எதிராகவும் இந்த அராஜக ஆட்சி ஒழியவும் மக்கள் போராட்டங்களை தமிழக பாஜக  முன்னெடுக்கும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Did the person who came to file a complaint come to the police station with a noose?: Nainar Nagendran questionsDMKMK Stalincrime news todayநயினார் நாகேந்திரன் கேள்விtn police news today
Share
Tweet
SendShare
Previous Post

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Next Post

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies