புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!
Aug 7, 2025, 08:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

Web Desk by Web Desk
Aug 7, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

20 வயது இளைஞர் ஒருவர் உலகின் மிகச் சிறிய நாடு ஒன்றை உருவாக்கி, அதிபராகப் பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்துள்ளார். யார் அந்த இளைஞர்? எங்கே உள்ளது அந்த புதிய நாடு? விரிவாகப் பார்க்கலாம்.

ஐரோப்பிய நாடுகளான குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையே உள்ளது இந்த மிகச்சிறிய நிலப்பரப்பு. இதன் மொத்த பரப்பே 125 ஏக்கர்தான். டானூப் ஆற்றின் குறுக்கே உள்ள இந்த நிலம் குரோஷியாவிற்குச் சொந்தமா?, செர்பியாவிற்கு சொந்தமா? என்பதில் பல ஆண்டுகளாகவே குழப்பம் நிலவி வருகிறது.

இந்த குழப்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இளைஞர் ஒருவர், அந்த நிலத்தைத் தனி நாடாக அறிவித்துள்ளார். மேலும், புதிய நாட்டின் அதிபராகவும் தன்னை அறிவித்துக்கொண்டுள்ளார். இத்தனைக்கும் அந்த இளைஞருக்கு வெறும் 20 வயதுதான். அவரது பெயர் டேனியல் ஜாக்சன்.

அந்த 125 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதை, தனது 14 வயதில் டேனியல் அறிந்தார். கேட்பாரற்ற இந்த நிலத்தைத் தனி நாடாக மாற்றினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அப்போதே அவருக்குத் தோன்றியுள்ளது. இதனைத் தனது நண்பர்களிடம் அவர் தெரிவிக்கவே, அவர்களும் இந்த யோசனையால் கவரப்பட்டனர். இதனை அறிந்த பலரும், பொடி பையன் ஏதோ விளையாட்டுத்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்தனர்.

ஆனால், தனது திட்டத்தில் டேனியல் உறுதியாக இருந்தார். அதன் வெளிப்பாடாக, 2019ஆம் ஆண்டு மே 30ம் தேதி, அந்த சர்ச்சைக்குரிய 125 ஏக்கர் நிலத்தைத் தனி நாடாக அறிவித்தார். அதற்கு  வெர்டிஸ் சுதந்திரக் குடியரசு எனவும் பெயரிட்டார். நாட்டிற்குப் பெயர் வைத்தால் போதுமா? தனி கொடி, சட்டங்கள், அமைச்சரவை, தனி நாணயம் உள்ளிட்டவை வேண்டாமா?

எனவே, அதற்கான வேலைகளை டேனியல் தொடங்கினார். அனைத்து பணிகளும் முடிவடைந்ததை அடுத்து, அது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். வெர்டிஸ் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன், செர்பியன் ஆகியவை இருக்கும் எனவும், யூரோ தேசிய நாணயமாகப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தனது நாட்டிற்கான தனிக் கொடியையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், தனி அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியுள்ள அவர், சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில் வசிக்கும் 400 பேரை தனது குடிமக்களாக அறிவித்துள்ளார். அவர்களுக்குத் தனி பாஸ்போர்ட் வழங்கி,  பலரையும் அவர் அதிர வைத்துள்ளார்.

தனது நாட்டிற்கு உலக நாடுகளின் அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது குரோஷியா மற்றும் செர்பிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் டேனியல் தெரிவித்துள்ளார்.

Tags: செர்பியாகுரோஷியாA 20-year-old youth who created a new country20 வயது இளைஞர்
ShareTweetSendShare
Previous Post

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

Related News

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

பிரதமர் மோடியை சந்தித்த கமல்ஹாசன்!

ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள்!

இந்தியாவில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 47 சதவீதம் அதிகரிப்பு!

திருப்பூரில் SSI கொலை – என்கவுண்டரில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies