மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் - அண்ணாமலை
Sep 24, 2025, 09:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

Web Desk by Web Desk
Aug 8, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு என்று நான்கு ஆண்டுகளாக வெறும் விளம்பரத்திலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்தார் ஸ்டாலின்.

இந்தக் குழு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2024 ஆம் ஆண்டு, தனது வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளில் முக்கியமான பல கொள்கைகள், தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து பல திட்டங்களை, ஏற்கனவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. மாநிலக் கல்விக் கொள்கை குழு அமைத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த வருடக் கல்வி ஆண்டும் தொடங்கி விட்டது. இன்னும் ஏழு மாதங்களில், திமுக ஆட்சியும் அகற்றப்படவிருக்கிறது.

மூன்று ஆண்டுகளாக தூங்கிக் கொண்டு, தற்போது இந்தக் கல்விக் கொள்கையை வெளியிடுவோம் என்பது, வெறும் விளம்பரம் இன்றி வேறென்ன? தமிழகம் முழுவதும், அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட பல பள்ளிகள் கட்டிடமின்றி மரத்தடியில் செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஒப்பந்ததாரர்களால் கட்டப்பட்ட பல பள்ளிக் கட்டிடங்கள், முதலமைச்சர் திறந்து வைத்த அடுத்த சில நாட்களிலேயே இடிந்து விழுந்து கொண்டிருக்கின்றன. இவற்றை சரி செய்யாமல், வெறும் அலங்காரத்திற்காகக் கல்விக் கொள்கை என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என அவர் கூறியுள்ளார்.

திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், ஹிந்தி உட்பட பல மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளில் இரண்டு மொழிகள்தான் கற்றுக் கொடுப்போம் என்று கூறுகிறார் முதலமைச்சர். பணம் இருப்பவர்கள் பல மொழிகள் கற்கலாம், ஏழை மாணவர்கள் இரண்டு மொழி தான் கற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை. இதில் என்ன சமத்துவம் இருக்கிறது, சமூக நீதி இருக்கிறது என்பதை, முதலமைச்சர்தான் கூற வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: National Education PolicydmlState Education Policy.PM ModibjpannamalaiChief Minister Stalin
ShareTweetSendShare
Previous Post

புதிய 4 வழிச்சாலை : மத்திய அரசு ஒப்புதல்!

Next Post

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

குழந்தைகளுக்கு புதிய கதை சொல்லும் பாகிஸ்தான் : ஆபரேஷன் சிந்தூரில் வென்றதாக பொய் கூறும் பாகிஸ்தான்!

குப்பை நகரமாகும் “ஐடி ஹப் சிட்டி” : மாநில அரசு மீது அதிருப்தியில் பெங்ளூருவாசிகள்

H-1B விசாவில் லாட்டரி நடைமுறை இனி ரத்து : அதிக பாதிப்புகளை சந்திக்கவுள்ள இந்திய ஊழியர்கள்!

மருத்துவ உலகில் சூட்டை கிளப்பிய டிரம்பின் கூற்று : TYLENOL மருந்தால் ஆட்டிசம் பாதிப்பா?

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – குவியும் ஆர்டர்கள், குஷியில் தொழிலாளர்கள்!

சவுதியை ஆட்டிப்படைக்கும் மெக்கா கிளர்ச்சி : பாக்., உடனான சவுதியின் ஒப்பந்தம் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் அனைத்துத் தரப்பினருக்கும் பலன் – நயினார் நாகேந்திரன்

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க உதவும் ஆஸ்பிரின்!

அர்ஜென்டினாவில் வாயில் முதலை எலும்புடன் கூடிய புதிய டைனோசர் கண்டுபிடிப்பு!

உத்தரப் பிரதேசம் : மாவட்ட கல்வி அலுவலரை பெல்டால் தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்!

சீமானும் விஜயலட்சுமியும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னை : வணிக வளாகங்களுக்கு சென்ற நயினார் நாகேந்திரன்!

நெல்லை – சென்னை வந்தே பாரத் 20 பெட்டியுடன் இன்று முதல் சேவை துவக்கம்!

மேற்குவங்கம் : தேங்கிய மழைநீரில் பழுதாகி நின்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்!

அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்த ஐசிசி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies