இந்தியா ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும்போது, உலகம் நம் முன் பணிந்து நம்மை விஸ்வகுருவாக ஏற்கும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய மோகன் பாகவத், நமது நாடு 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறினாலும், உலகிற்கு அதுவொன்றும் புதிதல்ல எனவும், ஏற்கனவே இதுபோல பல நாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இந்தியாவில் உள்ள ஆன்மிகமும், மத நம்பிக்கையும் உலகின் மற்ற நாடுகளில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா ஆன்மிகம் மற்றும் மத நம்பிக்கையில் சிறந்து விளங்கும்போது, உலகம் நம் முன் பணிந்து நம்மை விஸ்வ குருவாக ஏற்கும் என்றும் மோகம் பாகவத் தெரிவித்தார்.
நாம் துணிச்சலான மற்றும் அனைவரையும் சமமாகப் பார்க்கும் சிவபெருமானைப் போல மாற வேண்டும். என்றும், அவர் உலகின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவும் அவர் கூறினார்.