சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?
Nov 15, 2025, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

Web Desk by Web Desk
Aug 12, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – சீனா எல்லையான அக்சாய் சின் பகுதியை எளிதாக நெருங்கும்  வகையில் சீனா மிகப்பெரிய ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. சீனாவின் இந்த புதிய திட்டம்  இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது..

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனை நிலவி வருகிறது. இந்தியப் பகுதிக்குள் அவ்வப்போது சீனா அத்துமீறி சாலை அமைப்பதற்கும், உள்கட்டமைப்பு பணிகள் செய்ய முயற்சிப்பதற்கும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.  இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறும் சீனா, லடாக் பகுதியிலும் தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

இந்தநிலையில், உலகத்தின் கூரையான திபெத்தின் ஒவ்வொரு பகுதியையும், தங்கள் நாட்டுடன் நெருக்கமாக இணைக்கச் சீனா திட்டமிட்டு, அதற்கான முன்னெடுப்புகளை தொடங்கியுள்ளது. அதன்படி திபெத்தை சீனாவின் வடக்குப் பகுதியான ஷின்ஜியாங் உடன் இணைக்கும் மிகப்பெரிய ரயில்வே திட்டத்தைச் சீனா கையில் எடுத்துள்ளது. ஷின்ஜியாங்கில் உள்ள ஹோடன் பகுதியில் இருந்து திபெத்தில் உள்ள லாசா பகுதியை இணைக்கும் இந்த திட்டம், உண்மையில் சீன ரயில்களை இந்தியாவின் நுழைவு வாயிலான அக்சாய்சின் வழியாகக் கொண்டு செல்லும் வகையில் அமையக் கூடும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த அக்சாய் சின், 1962 ஆண்டு சீனப்போரின்போது சீனாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக மாறியது. மாவோவின் சீனா என்ற மெகா-உள்கட்டமைப்பு திட்டத்தை முன்னோடியாகக் கொண்டு, அக்சாய் சின் வழியாக மேற்கொள்ளப்படும் இந்த ரயில் பாதை சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அக்சாய்சின் பகுதியையொட்டி, கடந்த 1950-ம் ஆண்டு G219 – என்ற சாலையைச் சீனா அமைத்திருந்தது. தற்போது அதே பகுதியில் ரயில் பாதைகளை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

இதேபோன்று அருணாச்சல பிரதேசத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள லாசா – நியிஞ்சி ரயில் பாதையைச் சீனாவின் மேற்குப்பகுதியில் உள்ள ராணுவ தளமான செங்டு பகுதியுடன் இணைக்கச் சீனா திட்டமிட்டுள்ளது.  கடந்த 2017ம் ஆண்டு டோக்லாம் மோதல் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சும்பி பள்ளத்தாக்கை இணைக்கும் வகையிலும், நேபாள எல்லையை இணைக்கும் வகையிலும், ரயில் பாதைகளை அமைக்கச் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.

இந்திய எல்லையை நோக்கி சீன துருப்புகளை எளிதாக அனுப்பவும், ராணுவத் தளவாடங்களை எல்லையை நோக்கி வேகமாக நகர்த்தவும் இந்த ரயில் பாதைகள் உதவும் என்று கருதப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியையொட்டி சீனா மேற்கொண்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில்,  இந்தியாவும்  தக்க பதிலடி கொடுக்கும் வகையில் திட்டங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: China's new railway project: Will India retaliate?சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம்Indiaஇந்தியாchina newschina news today
ShareTweetSendShare
Previous Post

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

Next Post

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

Related News

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies