சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?
Aug 12, 2025, 09:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

Web Desk by Web Desk
Aug 12, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – சீனா எல்லையான அக்சாய் சின் பகுதியை எளிதாக நெருங்கும்  வகையில் சீனா மிகப்பெரிய ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. சீனாவின் இந்த புதிய திட்டம்  இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது..

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனை நிலவி வருகிறது. இந்தியப் பகுதிக்குள் அவ்வப்போது சீனா அத்துமீறி சாலை அமைப்பதற்கும், உள்கட்டமைப்பு பணிகள் செய்ய முயற்சிப்பதற்கும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.  இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறும் சீனா, லடாக் பகுதியிலும் தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

இந்தநிலையில், உலகத்தின் கூரையான திபெத்தின் ஒவ்வொரு பகுதியையும், தங்கள் நாட்டுடன் நெருக்கமாக இணைக்கச் சீனா திட்டமிட்டு, அதற்கான முன்னெடுப்புகளை தொடங்கியுள்ளது. அதன்படி திபெத்தை சீனாவின் வடக்குப் பகுதியான ஷின்ஜியாங் உடன் இணைக்கும் மிகப்பெரிய ரயில்வே திட்டத்தைச் சீனா கையில் எடுத்துள்ளது. ஷின்ஜியாங்கில் உள்ள ஹோடன் பகுதியில் இருந்து திபெத்தில் உள்ள லாசா பகுதியை இணைக்கும் இந்த திட்டம், உண்மையில் சீன ரயில்களை இந்தியாவின் நுழைவு வாயிலான அக்சாய்சின் வழியாகக் கொண்டு செல்லும் வகையில் அமையக் கூடும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த அக்சாய் சின், 1962 ஆண்டு சீனப்போரின்போது சீனாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக மாறியது. மாவோவின் சீனா என்ற மெகா-உள்கட்டமைப்பு திட்டத்தை முன்னோடியாகக் கொண்டு, அக்சாய் சின் வழியாக மேற்கொள்ளப்படும் இந்த ரயில் பாதை சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அக்சாய்சின் பகுதியையொட்டி, கடந்த 1950-ம் ஆண்டு G219 – என்ற சாலையைச் சீனா அமைத்திருந்தது. தற்போது அதே பகுதியில் ரயில் பாதைகளை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

இதேபோன்று அருணாச்சல பிரதேசத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள லாசா – நியிஞ்சி ரயில் பாதையைச் சீனாவின் மேற்குப்பகுதியில் உள்ள ராணுவ தளமான செங்டு பகுதியுடன் இணைக்கச் சீனா திட்டமிட்டுள்ளது.  கடந்த 2017ம் ஆண்டு டோக்லாம் மோதல் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சும்பி பள்ளத்தாக்கை இணைக்கும் வகையிலும், நேபாள எல்லையை இணைக்கும் வகையிலும், ரயில் பாதைகளை அமைக்கச் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.

இந்திய எல்லையை நோக்கி சீன துருப்புகளை எளிதாக அனுப்பவும், ராணுவத் தளவாடங்களை எல்லையை நோக்கி வேகமாக நகர்த்தவும் இந்த ரயில் பாதைகள் உதவும் என்று கருதப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியையொட்டி சீனா மேற்கொண்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில்,  இந்தியாவும்  தக்க பதிலடி கொடுக்கும் வகையில் திட்டங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Indiaஇந்தியாchina newschina news todayChina's new railway project: Will India retaliate?சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம்
ShareTweetSendShare
Previous Post

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

Next Post

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

Related News

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies