தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?
Jan 14, 2026, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத சுதந்திரத்துக்கு முதல்நாள், ஆட்சி அதிகார மாற்றத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.  சுதந்திரக்  கொண்டாட்ட உற்சாகத்தில் மக்கள் திளைத்திருந்தாலும், கொல்கத்தாவில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் நின்றபாடில்லை. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி அதிகாலை, பேலியாகாட் பகுதியில்  நடைப் பயிற்சி செய்யக் காந்தி வெளியில் வந்தார். குளிர்ந்த காற்றில் ரத்த வாடை நிறைந்திருந்தது. வழியெங்கும் எரிந்து சாம்பலான வீடுகள். நொறுங்கிய குடியிருப்புகள்.

காந்தியுடன் வந்த அவரது உதவியாளர்கள், இவை முஸ்லீம் பயங்கரவாதிகளால் எரித்து தரைமட்டமான இந்துக்களின் வீடுகள் என்று விளக்கினார்கள்.  பதிலேதும் சொல்லமுடியாமல்  காந்தி  தவித்தார்.

காலை 9 மணிக்கு கராச்சியின் சட்டமன்ற வளாகத்தில், மவுண்ட் பேட்டன் ,ஜின்னா,உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கூடியிருந்தனர். பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக ஜின்னா பதவியேற்றார். இது தவிர, பாகிஸ்தானில்  யாரும் சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடியதாக தகவல்கள் இல்லை. ஒருசில இடங்களில் மட்டுமே பாகிஸ்தான் தேசிய கொடி பறக்கவிடப் பட்டிருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் எங்குமே பாகிஸ்தான் தேசிய கொடி பிறக்கவில்லை. எந்தவித கொண்டாடட்டமுமில்லை.

அடிமை இந்தியாவின் கடைசி மாலை நேரப் பிரார்த்தனைக்குப் பின் காந்தி என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். மதவாத வன்முறைகள் தலைவிரித்து ஆடுமேயானால், பெற்ற சுதந்திரம் நீண்ட நாள் நீடிக்காது என்று கூறிய காந்தி, தொண்டர்களை விரதம் இருக்குமாறும், பிரார்த்தனை செய்யுமாறும், சுதேசி நூல் நோற்குமாறும் வலியுறுத்தினார்.

டெல்லியில் விடாது மழை பெய்து கொண்டிருந்தது. மாலை 6 மணிக்கு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் இல்லத்தில், நேருவைத் தவிர அமைச்சரவையில் பங்கேற்கும் அனைவரும் கூடியிருந்தனர். பாரதத்தின் வளமான எதிர்காலத்துக்காக, சம்ஸ்கிருத வேத மந்திரங்கள் ஒலிக்க, மாபெரும் யாகம் நடந்தது.  அதன்பிறகு, மாநிலங்களவை கட்டிடத்தில் நடக்க இருக்கும் ஆட்சி அதிகார மாற்ற வரலாற்று நிகழ்வுக்கு அனைவரும் சென்றனர்.

சர்தார் வல்லபாய் படேல்,ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் ஒவ்வொருவராக வந்தவண்ணம் இருந்தனர். கடும் மழையையும் பொருட்படுத்தாது, கூடியிருந்த  மக்கள்  தலைவர்கள் வரும் போது, வந்தே மாதரம் என்று கோஷமிட்டு விண்ணை அதிர வைத்தனர்.

அவைத் தலைவர் இருக்கையில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் இருந்தார். அவருக்கு இடப்புறத்தில் மவுண்ட்பேட்டன் இருந்தார். ரோஜா பதித்த நேர்த்தியான உடையில் நேரு அமர்ந்திருந்தார்.

அனைத்து சுதந்திர வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்,காந்தியை குறு என்று போற்றிய ராஜேந்திர பிரசாத். உரைக்குப் பின், பலநாட்கள் கண்விழித்துத் தயாரித்த உரையை நேரு பேசினார். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு, அரங்கத்திலிருந்த பணியாளர் ஒருவர்,
மங்கல சங்கு  ஊதி, சுதந்திர பரவசத்தை ஏற்படுத்தினார். சுதந்திர இந்தியா பிறந்தது.

பின்னிரவிலும் கனமழை விடாது பெய்து கொண்டிருந்தது. பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்திலிருந்து ஏராளமானோர் அகதிகளாக டெல்லிக்கு வந்து கொண்டிருப்பதாகத் தகவல் வந்தது. மேலும், சுதந்திர தின கொண்டாட்டங்களில் வெடிகுண்டு வீசி வன்முறை தாக்குதல் நடத்த இஸ்லாமியர்கள் திட்டம் வகுத்திருப்பதாகவும் செய்திகள் வந்தன.

முஸ்லீம் வன்முறைகளை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பது பற்றி, ஸ்வயம் சேவகர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் அரசு பொது நிகழ்ச்சி கல்கத்தா கவர்னர் மாளிகையில் நடந்தது. மேற்கு வங்க ஆளுநராக  ராஜாஜி பதவி ஏற்றுக் கொண்டார்.

பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன், எதிர்பாராத விதமாக , கவர்னர் மாளிகைக்குள் ஓடிய மக்கள், அங்கிருந்த விலையுயர்ந்த  காட்சிப் பொருட்கள் மற்றும் சாமான்கள் சூறையாடப் பட்டன. சூறையாடிக் கொண்டு, காந்திஜிக்கு ஜே என்று கோஷமிட்ட படியே மாளிகையை விட்டு வெளியே ஓடிச் சென்றனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் அரசு பொது நிகழ்ச்சி.இப்படி ஒரு கலவரத்தில் தான் முடிந்தது என்பது வரலாறு.

Tags: Indiapakistanதேசப் பிரிவினை கொடூரங்கள்78th independance dayThe horrors of partition: What happened on 14 August 1947?14 ஆகஸ்ட் 1947
ShareTweetSendShare
Previous Post

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

Next Post

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் – சிவகங்கை ரயில் நிலையத்தில் பரபரப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies