பூமியை அதி வேகமாக நெருங்கும் 'சிறுகோள்' : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!
Jan 14, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

990 அடி உயரம்கொண்ட ஒரு ஸ்டேடியம் அளவிலான சிறுகோள் மணிக்கு 21 ஆயிரத்து 994 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்த தொகுப்பில்.

நமது சூரியக் குடும்பம், பில்லியன் கணக்கான ஆண்டுகளாக பல்வேறு விண்வெளிப் பொருட்களால் நிரம்பியுள்ளது. இவற்றுள் குறிப்பிடத்தக்கதான சிறுகோள்கள் என்பவை சூரியனைச் சுற்றி வரும் பாறைத் துண்டுகளாகும்.

இவை நமது சூரியக் குடும்பத்தின் ஆரம்பக் காலம் பற்றிய விலைமதிப்பற்ற தகவல்களை தருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், 1997 QK1 எனப் பெயரிடப்பட்ட ஒரு சிறுகோள், பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருப்பதை நாசா கண்டறிந்துள்ளது.

990 அடி உயரம் உள்ள இந்த சிறுகோள் ஒரு பெரிய ஸ்டேடியம் அளவில் இருப்பதாகவும், அது பூமியை நோக்கி மணிக்கு 21 ஆயிரத்து 994 மைல் வேகத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோள் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி பூமியிலிருந்து சுமார் 1.87 மில்லியன் மைல் தொலைவில் கடந்து செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி தரநிலைகளின்படி இது ஒப்பீட்டளவில் நெருக்கமாக இருந்தாலும், பூமிக்கு இந்த சிறுகோளால் எந்த வகையிலும் பாதிப்பில்லை என்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பூமிக்குப் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த சிறுகோள் பயணிக்கும் பாதையானது விஞ்ஞானிகள் மூலம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறிய சுற்றுப்பாதை மாற்றங்கள் கூட சிறுகோளின் பாதையை மாற்றக்கூடும் என்பதால், சாத்தியமான அபாயங்களை முன்கூட்டியே கண்டறியும் பொருட்டு நாசா, இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே நாசா, ESA, JAXA ஆகிய விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து, 2029-ம் ஆண்டு அப்போபிஸ் உள்ளிட்ட சிறுகோள்களை ஆராயும் திட்டங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விண்வெளி ஒருகணம் அமைதியாகவும், மறுகணம் கணிக்க முடியாததாகவும் இருக்கும் என்பதால், விஞ்ஞானிகள் அடுத்து என்ன நடக்கக்கூடும் என்பதில் ஒவ்வொரு கணமும் விழிப்புடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

Tags: NASA'One Earthநாசா'Asteroid' approaching Earth at high speed: NASA confirms no dangerபூமியை அதி வேகமாக நெருங்கும் 'சிறுகோள்'
ShareTweetSendShare
Previous Post

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Next Post

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies