பூமியை அதி வேகமாக நெருங்கும் 'சிறுகோள்' : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!
Aug 7, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 02:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

990 அடி உயரம்கொண்ட ஒரு ஸ்டேடியம் அளவிலான சிறுகோள் மணிக்கு 21 ஆயிரத்து 994 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்த தொகுப்பில்.

நமது சூரியக் குடும்பம், பில்லியன் கணக்கான ஆண்டுகளாக பல்வேறு விண்வெளிப் பொருட்களால் நிரம்பியுள்ளது. இவற்றுள் குறிப்பிடத்தக்கதான சிறுகோள்கள் என்பவை சூரியனைச் சுற்றி வரும் பாறைத் துண்டுகளாகும்.

இவை நமது சூரியக் குடும்பத்தின் ஆரம்பக் காலம் பற்றிய விலைமதிப்பற்ற தகவல்களை தருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், 1997 QK1 எனப் பெயரிடப்பட்ட ஒரு சிறுகோள், பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருப்பதை நாசா கண்டறிந்துள்ளது.

990 அடி உயரம் உள்ள இந்த சிறுகோள் ஒரு பெரிய ஸ்டேடியம் அளவில் இருப்பதாகவும், அது பூமியை நோக்கி மணிக்கு 21 ஆயிரத்து 994 மைல் வேகத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோள் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி பூமியிலிருந்து சுமார் 1.87 மில்லியன் மைல் தொலைவில் கடந்து செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி தரநிலைகளின்படி இது ஒப்பீட்டளவில் நெருக்கமாக இருந்தாலும், பூமிக்கு இந்த சிறுகோளால் எந்த வகையிலும் பாதிப்பில்லை என்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பூமிக்குப் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த சிறுகோள் பயணிக்கும் பாதையானது விஞ்ஞானிகள் மூலம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறிய சுற்றுப்பாதை மாற்றங்கள் கூட சிறுகோளின் பாதையை மாற்றக்கூடும் என்பதால், சாத்தியமான அபாயங்களை முன்கூட்டியே கண்டறியும் பொருட்டு நாசா, இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே நாசா, ESA, JAXA ஆகிய விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து, 2029-ம் ஆண்டு அப்போபிஸ் உள்ளிட்ட சிறுகோள்களை ஆராயும் திட்டங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விண்வெளி ஒருகணம் அமைதியாகவும், மறுகணம் கணிக்க முடியாததாகவும் இருக்கும் என்பதால், விஞ்ஞானிகள் அடுத்து என்ன நடக்கக்கூடும் என்பதில் ஒவ்வொரு கணமும் விழிப்புடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

Tags: NASA'One Earthநாசா'Asteroid' approaching Earth at high speed: NASA confirms no dangerபூமியை அதி வேகமாக நெருங்கும் 'சிறுகோள்'
Share
Tweet
SendShare
Previous Post

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Next Post

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

Related News

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies