ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!
Aug 24, 2025, 12:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

Web Desk by Web Desk
Aug 23, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவுடனான போரில் உயிரிழந்த 6000 ராணுவ வீரர்கள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது. எனினும் பலரது உடல்கள் மோசமாக இருப்பதால் அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடித்து வருகிறது.

ரஷ்யா- உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் முயன்று வருகின்றன. அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் ரஷ்யா போரில் உயிரிழந்த இருநாடுகளை சேர்ந்த 6,000 வீரர்களின் உடல்களை பரிமாறி கொள்ள பரஸ்பரம் சம்மதம் தெரிவித்தன.

அதன் அடிப்படையில் போரில் உயிர்நீத்த 6000 உக்ரைன் வீரர்களின் உடல்களை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. தெற்கு உக்ரைன் பகுதியில் உள்ள துறைமுக நகரமான ஒடேசா ரயில் நிலையத்தில் 6000 உக்ரைன் வீரர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

சிதைந்த நிலையிலும், சேறுபடிந்த நிலையிலும் உக்ரேனிய வீரர்களின் உடல்கள் இருக்கின்றன. ஏற்கனவே உடற்கூராய்வு சோதனை கூடங்கள் உடல்களால் நிரம்பியிருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக கன்வேயர் பெல்ட் போன்ற செயல்பாட்டில் வீரர்களின் உடல்கள் விரைவாக அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

கடுமையான கோடை வெப்பத்தைத் தாங்கும் கூடாரத்தின் கீழ் 6 பேர் கொண்ட குழுவினர் உடல்களை அடையாளம் காணும் பணியை மேற்கொள்கின்றன. ஒவ்வொரு குழுவிலும், புலனாய்வு அதிகாரி, தடயவியல் தொழில்நுட்ப வல்லுநர், நோயியல் நிபுணர், உளவுத்துறை அதிகாரி, துப்புரவு பணியார் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

ஒரு நிலையத்தில் இருந்து மற்றொரு நிலையத்திற்கு அரைமணி நேர இடைவெளியில் ஒவ்வொரு உடலும் நகர்த்தப்படுகின்றன. இறந்த வீரர்களின் உடல்களில் வெடிபொருட்கள், ஆவணங்கள் அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்டு, பின்னர் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு உடலுக்கும் தனித்துவமான 17 இலக்க அடையாள எண் ஒதுக்கப்படுகிறது, அதில் வருகை, தேதி, பெறும் நிறுவனம் மற்றும் ஒரு தனிப்பட்ட வரிசை குறியீடு இடம்பெற்றிருக்கும். உடல்களில் ஆவணங்கள், டேக்குகள், நகைகள் அல்லது கிழிந்த உடைகள், உடல் பாகங்கள் இருந்தால், அவை தொழில்நுட்ப வல்லுநரால் புகைப்படம் எடுக்கப்பட்டு, தனித்தனி பைகளில் வைக்கப்படும்.

போரில் ராணுவத்தினர், பொதுமக்கள் என 70 ஆயிரம் பேர் காணாமல் போனதாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உடல்கள் மோசமாக உள்ளதால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,

அடையாளம் காணும் செயல்முறை ஓர் ஆண்டுக்கு மேல் நீடிக்கலாம் என்றும், சில சமயங்களில், ஒரு உடல் பையில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் எச்சங்கள் இருக்கும் என்றும், இது அடையாளம் காணும் பணியை இன்னும் சிக்கலாக்கும் என்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

Tags: bodies of 6russiaRussia Ukraine warputinUnited StatesTrumpceasefire000 soldiers
ShareTweetSendShare
Previous Post

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies