ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!
Sep 11, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 23, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யாவுடனான போரில் உயிரிழந்த 6000 ராணுவ வீரர்கள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது. எனினும் பலரது உடல்கள் மோசமாக இருப்பதால் அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடித்து வருகிறது.

ரஷ்யா- உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் முயன்று வருகின்றன. அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் ரஷ்யா போரில் உயிரிழந்த இருநாடுகளை சேர்ந்த 6,000 வீரர்களின் உடல்களை பரிமாறி கொள்ள பரஸ்பரம் சம்மதம் தெரிவித்தன.

அதன் அடிப்படையில் போரில் உயிர்நீத்த 6000 உக்ரைன் வீரர்களின் உடல்களை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. தெற்கு உக்ரைன் பகுதியில் உள்ள துறைமுக நகரமான ஒடேசா ரயில் நிலையத்தில் 6000 உக்ரைன் வீரர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

சிதைந்த நிலையிலும், சேறுபடிந்த நிலையிலும் உக்ரேனிய வீரர்களின் உடல்கள் இருக்கின்றன. ஏற்கனவே உடற்கூராய்வு சோதனை கூடங்கள் உடல்களால் நிரம்பியிருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக கன்வேயர் பெல்ட் போன்ற செயல்பாட்டில் வீரர்களின் உடல்கள் விரைவாக அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

கடுமையான கோடை வெப்பத்தைத் தாங்கும் கூடாரத்தின் கீழ் 6 பேர் கொண்ட குழுவினர் உடல்களை அடையாளம் காணும் பணியை மேற்கொள்கின்றன. ஒவ்வொரு குழுவிலும், புலனாய்வு அதிகாரி, தடயவியல் தொழில்நுட்ப வல்லுநர், நோயியல் நிபுணர், உளவுத்துறை அதிகாரி, துப்புரவு பணியார் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

ஒரு நிலையத்தில் இருந்து மற்றொரு நிலையத்திற்கு அரைமணி நேர இடைவெளியில் ஒவ்வொரு உடலும் நகர்த்தப்படுகின்றன. இறந்த வீரர்களின் உடல்களில் வெடிபொருட்கள், ஆவணங்கள் அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்டு, பின்னர் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு உடலுக்கும் தனித்துவமான 17 இலக்க அடையாள எண் ஒதுக்கப்படுகிறது, அதில் வருகை, தேதி, பெறும் நிறுவனம் மற்றும் ஒரு தனிப்பட்ட வரிசை குறியீடு இடம்பெற்றிருக்கும். உடல்களில் ஆவணங்கள், டேக்குகள், நகைகள் அல்லது கிழிந்த உடைகள், உடல் பாகங்கள் இருந்தால், அவை தொழில்நுட்ப வல்லுநரால் புகைப்படம் எடுக்கப்பட்டு, தனித்தனி பைகளில் வைக்கப்படும்.

போரில் ராணுவத்தினர், பொதுமக்கள் என 70 ஆயிரம் பேர் காணாமல் போனதாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உடல்கள் மோசமாக உள்ளதால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,

அடையாளம் காணும் செயல்முறை ஓர் ஆண்டுக்கு மேல் நீடிக்கலாம் என்றும், சில சமயங்களில், ஒரு உடல் பையில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் எச்சங்கள் இருக்கும் என்றும், இது அடையாளம் காணும் பணியை இன்னும் சிக்கலாக்கும் என்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

Tags: Trumpceasefire000 soldiersbodies of 6russiaRussia Ukraine warputinUnited States
Share
Tweet
SendShare
Previous Post

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies