விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ - சிறப்பு தொகுப்பு!
Oct 10, 2025, 11:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Aug 24, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வல்லரசு நாடுகளுக்கு இணையாக விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவும் திட்டத்தின் இறுதி கட்டத்தை இந்தியா எட்டியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

அண்மையில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று திரும்பினார். இதன் மூலம் அங்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். சுக்லா சென்று வந்த அந்த விண்வெளி ஆய்வு மையம், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியது.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டும்தான் தங்களுக்கென தனியாக விண்வெளி ஆய்வு யைமத்தை கொண்டுள்ளன.
இந்தியாவுக்கென்று இதுவரை தனியாக விண்வெளி ஆய்வு மையம் இல்லை. அதனை கட்டமைக்கும் முயற்சியில் இந்தியா தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

விண்வெளியில் இந்தியா உருவாக்கவுள்ள ஆய்வு மையம் மிகப்பெரியது. இதில் தங்கியபடி, இந்திய விண்வெளி வீரர்களும், விஞ்ஞானிகளும் விண்வெளியை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். இந்நிலையில், விண்வெளியில் இந்தியா அமைக்கவுள்ள அந்த ஆய்வு மையத்தின் மாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய விண்வெளி தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, விண்வெளியில் அமைக்கவுள்ள ஆய்வு மையத்தின் மாதிரியை இஸ்ரோ காட்சிப்படுத்தியது.

சர்வதேச விண்வெளி மையத்தை 5 தனித்தனி பகுதிகளாக தயாரித்து, அவற்றை பூமியில் இருந்து விண்ணுக்கு செலுத்தி ஒன்றிணைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த 5 பகுதிகளும் 52 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான எடையை கொண்டிருக்கும்.

இவை அனைத்தும் 2028ம் ஆண்டு முதல் 2035ம் ஆண்டுக்குள் LVM3 ராக்கெட் உதவியுடன் விண்ணுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு மையம் கட்டமைக்கப்படவுள்ளது. இந்தியாவின் ஆய்வு மையம் பூமியில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மையம், விண்வெளி குறித்த ஆய்வுக்கு மட்டுமல்லாமல், விண்வெளி சுற்றுலாவை ஊக்கவிக்கவும் உதவும் என கருதப்படுகிறது. அதன்மூலம் விண்வெளி துறை சார்ந்த வர்த்தகங்களிலும் இந்தியாவால் ஈடுபட முடியும் என கூறப்படுகிறது.

Tags: IndiarussiaUnited StatesInternational Space StationAstronaut Subhanshu Shuklaspace research center
ShareTweetSendShare
Previous Post

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

Next Post

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies